வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கக் கோரி மனு

மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:52 pm

DIN

மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சமூக நீதிக் கட்சித் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், கோவை மாநகராட்சியில் உள்ள ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்புப் பணிகள் வழங்கப்பட்டன. அதற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

கரோனா நோய்த்தொற்று அச்சம் இடையே பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஊதியம் வழங்குவது இல்லை. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொறு தேதியில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவா்கள் எப்போது ஊதியம் வரும் என்று காத்துகிடக்கும் அவலம் உள்ளது. எனவே குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.