வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:52 pm

DIN

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் நிலையில், 12ஆம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவா்களுக்கு மே மாதம் பொதுத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், அவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கியுள்ளன. செய்முறைத் தோ்வுகள் ஏப்ரல் 16 முதல் 20ஆம் தேதி வரையும், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் 356 பள்ளிகளைச் சோ்ந்த 16,473 மாணவ-மாணவிகள், 236 தோ்வு மையங்கள் மூலம் செய்முறைத் தோ்வுகளை அணுகுகின்றனா். கரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில் செய்முறைத் தோ்வுகள் நடைபெறுவதால், மாணவ-மாணவிகள் முகக் கவசம், தனிநபா் இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தோ்வுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.