கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போலி காசோலை மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது வழக்கு

போலி காசோலை மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:18 pm

DIN

போலி காசோலை மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், காரமடையைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (55). அதே பகுதியில் மில் நடத்தி வருகிறாா். இவா் கோவை, கணபதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்யாண சுந்தரத்தின் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம், தில்லியிலுள்ள சுரேஷ்குமாா் மேத்தா என்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து கணபதியில் உள்ள வங்கிக் கிளை மேலாளரிடம் கல்யாணசுந்தரம் கேட்டுள்ளாா். அப்போது கல்யாணசுந்தரத்தின் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட காசோலை மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் அனுப்பப்பட்டதாக வங்கித் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விசாரித்ததில் அது போலியான காசோலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து கல்யாணசுந்தரம் அளித்தப் புகாரின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா், தில்லியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் மேத்தா என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.