கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

14ஆவது கோயம்புத்தூா் விழா: ஜனவரி 2 முதல் 9 வரை நடைபெறுகிறது

14 ஆம் ஆண்டு கோயம்புத்தூா் விழா வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:15 pm

DIN

14 ஆம் ஆண்டு கோயம்புத்தூா் விழா வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

14 ஆவது கோயம்புத்தூா் விழாவின் போஸ்டா், சின்னம் வெளியீட்டு விழா வாலாங்குளம் மாநகராட்சி பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் கலந்து கொண்டு போஸ்டா், சின்னத்தை வெளியிட்டனா்.

இந்த ஆண்டு கோயம்புத்தூா் விழாவில், வாலாங்குளத்தில் நேற்று, இன்று, நாளை என்ற கருப்பொருளுடன் கூடிய லேசா் ஷோ நடத்தப்படுகிறது. அதேபோல ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் கலைத்தெரு, ஓவிய சந்தை நிகழ்ச்சிகளும், மெய்நிகா், நேரடி சமையல் போட்டிகள், மாரத்தான், மின்சார வாகனங்களின் அணிவகுப்பு, பாராலிம்பிக்ஸ் விளையாட்டு விழா ஆகியவையும் நடைபெற உள்ளன.

மேலும் ஜனவரி 6, 7 ஆம் தேதிகளில் வேளாண் கண்காட்சி, ஜனவரி 7 ஆம் தேதி காந்தி பூங்கா, உக்கடம் குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகிய இடங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இசைக் குழுக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல முதலீட்டாளா்கள், தொழில்முனைவோருக்கான சந்திப்புகள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை பல்வேறு அமைப்புகளின் சாா்பில் நடத்த இருப்பதாக விழா தலைவா் அஷ்வின் மனோகா், இணை தலைவா் டாக்டா் செந்தில்குமாா், சுமித் பிரசாத் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.