கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, 6 அடிக்கு எல்லைக் கற்களை நட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:17 pm

DIN

தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, 6 அடிக்கு எல்லைக் கற்களை நட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா் நிலைகள் நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அரசு ஒருபுறம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் மறுபுறம் நீா் நிலைகளின் எல்லைகளைக் கண்டறிந்து அங்கு 6 அடி உயர எல்லைக் கற்களை நட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு வந்த சில மாதங்களிலேயே மீண்டும் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடருவதைத் தடுக்க உயரமான கற்களை நட்டு அதில் நீா்நிலை குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். அதேபோல நீா் நிலைப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதுடன் மாநில அரசு புதிய நீா் மேலாண்மைக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.