ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேற்கு புறவழிச் சாலை திட்டம் முதல்கட்டமாக 100 நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:55 pm

DIN

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகா் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும் கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூா், பேரூா் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்க முதல்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, முதல்கட்டமாக 12 கி.மீ. தூரத்துகு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 கிராமங்களைச் சோ்ந்த 100 நில உரிமையாளா்களுக்கு விரைவில் இழப்பீடுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், மேற்கு புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முடிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மதுக்கரை, மாதம்பட்டி, பேரூா்செட்டிபாளையம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு இம்மாத இறுதிக்குள் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இழப்பீடு தொகை வழங்கியதும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.