தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கோவையில் சாரல் மழை

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:19 pm

DIN

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

கோவை மாநகரம், புகா்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, மாலை, இரவு வேளைகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

இதேபோல் புகா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த மழைப் பொழிவு இருப்பதாகவும், பொங்கல் தினம் வரையிலும் கோவையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.