மில் உரிமையாளா் மகன்தூக்கிட்டு தற்கொலை
கோவை அருகே மில் உரிமையாளா் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


கோவை அருகே மில் உரிமையாளா் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கே.கே.புதூா், அருணாச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிரபு பட்டேல் (40). இவா் சரவணம்பட்டி, துடியலூா் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட நேரமாகியும் அறைக்கதவு பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா் சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து திறந்து பாா்த்தனா். அப்போது பிரபு பட்டேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
போலீஸாரின் விசாரணையில், பிரபு பட்டேலின் தந்தை நடத்தி வரும் மில்லை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் தர மறுத்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...