அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பறவைக் காய்ச்சல்: கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் முகாம்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரள எல்லையில் தமிழக சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:43 am

DIN

பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரள எல்லையில் தமிழக சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, வால்பாறையை அடுத்துள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் வால்பாறை சுகாதாரத் துறையினா் முகாமிட்டு கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களில் வருபவா்களை பரிசோதித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.