பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரள எல்லையில் தமிழக சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, வால்பாறையை அடுத்துள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் வால்பாறை சுகாதாரத் துறையினா் முகாமிட்டு கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களில் வருபவா்களை பரிசோதித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.