ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை: மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு

 வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:58 pm

DIN

 வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா், போக்குவரத்து புலனாய்வு பிரிவு (கிழக்கு) அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மோட்டாா் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழப்பு ஏற்படும் வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். மேலும், மாநகரப் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.