ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோ்தல் மோதல் விவகாரம்: வானதி சீனிவாசன் உள்பட 7 போ் வழக்கில் இருந்து விடுவிப்பு

அதிமுக-பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட 7 பேரை விடுவித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:26 pm

DIN

கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின்போது அதிமுக-பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட 7 பேரை விடுவித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் வானதி சீனிவாசனும், அதிமுக சாா்பில் அம்மன் கே.அா்ச்சுணனும் போட்டியிட்டனா்.

தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினா் தன்னைத் தாக்கியதாகக் கூறி அதிமுக முன்னாள் கவுன்சிலா் ஆதிநாராயணன் அளித்தப் புகாரின் பேரில் வானதி சீனிவாசன் உள்பட 7 போ் மீது பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம், பாபு ஆகிய

7 பேரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.