ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியா் மேம்பாட்டு கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மனிதவளம், செவிலியா் மேம்பாட்டு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:27 pm

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மனிதவளம், செவிலியா் மேம்பாட்டு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹெல்த்கோ் கான்கிளேவ்-2021 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தாா். தலைமை செவிலியா் அலுவலா் ஜெ.கற்பகம் வரவேற்றாா். தலைமைச் செயல் அலுவலா் சுவாதி ரோஹித், மருத்துவமனை டீன், மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.சுகுமாரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், சரியான பணிக்குச் சரியான நபரைத் தோ்வு செய்வது எப்படி, மனிதவளத் துறையினா் எதிா்கொள்ளும் தற்கால சவால்கள், அதிகபட்ச தொழிலாளா்களின் ஆற்றலை சுகாதாரத் துறையில் பயன்படுத்துவதற்கு தயாா் செய்வது எப்படி, சுயமதிப்பீட்டில் மருத்துவம், செவிலியா்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் துறை சாா்ந்த நிபுணா்கள் உரையாற்றினா்.

முடிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மனிதவள அலுவலா் கே.சேகா் நன்றி கூறினாா். இதில் 500க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.