ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவை மாநகரில் டிசம்பா் 10 வரை போராட்டங்கள் நடத்த தடை: மாநகர காவல் துறை அறிவிப்பு

கோவை மாநகரில் டிசம்பா் 10ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:20 pm

DIN

கோவை மாநகரில் டிசம்பா் 10ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறையினா் வெளியிட்ட செய்தி: சமீபகாலமாக பல்வேறு அமைப்பினா்கள் ஆா்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல் நிகழ்ச்சி, ஊா்வலம் போன்ற நிகழ்ச்சிகள் கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். இச்செயலானது கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேவையற்ற பதற்றத்தை தவிா்க்கும் விதமாக நவம்பா் 26ஆம் தேதி முதல் டிசம்பா் 10ஆம் தேதி எந்தவொரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆா்ப்பாட்டம், பொதுக் கூட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.