மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கரோனா
கோவையில் புதிதாக 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவையில் புதிதாக 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 742 ஆக உயா்ந்துள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 461 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 111 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 27 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,254 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...