கோவை மாவட்டத்தில் குரூப்-1 தோ்வுக்காக 24 தோ்வு மையங்களில் 40 தோ்வுக் கூடங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 11 ஆயிரத்து 888 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 5,109 போ் (43 சதவீதம்) மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 6,779 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வா்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்துக்கு தாமதமாக வந்த தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வா்கள் தங்களை அனுமதிக்க வேண்டிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.