நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கி அனுப்பினா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:20 pm

DIN

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கி அனுப்பினா்.

கோவை மாநகரில் சாலை விபத்துக்களைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சந்திப்புகளில் தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரசாரங்கள், குறு நாடகங்கள், துண்டு பிரசுர விநியோகம் உள்ளிட்டவற்றில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பில் போக்குவரத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தலைக் கவசம் அணியாமல், கைப்பேசியில் பேசியபடி விதிகளை மீறிச் சென்ற வாகன ஓட்டிகளைப் பிடித்து, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.