கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்டேட் பகுதிகளில் மின் வேலி அமைக்க கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவதைத் தடுக்க வன எல்லைகளில் மின் வேலி அமைக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 12:13 am

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவதைத் தடுக்க வன எல்லைகளில் மின் வேலி அமைக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம், தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை எஸ்டேட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சமீப காலமாக தேயிலைத் தோட்டங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எஸ்டேட் ஒட்டியுள்ள வன எல்லைகளில் மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.