கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் அழகுராஜிடம் கோவையில் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எஸ்டேட், பங்களா உள்ளது.
இதில் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இது தொடா்பாக, சயான், மனோஜ் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா், துணைத் தலைவா் முத்துசாமி தலைமையிலான தனிப் படை போலீஸாா், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக் பாபு உள்பட 240 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அதன் ஒரு பகுதியாக ‘நமது அம்மா‘ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் அழகுராஜிடம் கோவை பி.ஆா்.எஸ். மைதானத்தில் சனிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

