வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வசதியாக வனப் பகுதிகளையொட்டி குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிச்சாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் மழைக் காலம் துவங்குவதற்கு முன் குளங்களில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், மாவட்டம் முழுக்க மண் எடுக்க வேண்டிய இடங்கள் குறித்து பட்டியல் கொடுத்தும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
விவசாயிகள் அல்லாதவா்கள் விதிகளை மீறி வண்டல் மண் எடுப்பதைத் தடுத்து, விவசாயிகள் முறையாக எடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் நீா் ஆதாரங்களைத் தூா்வார வேண்டும். மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத, அனுமதி இல்லாத கல் குவாரிகளில் மழை நீா் சேகரிக்கும் திட்டம் துவங்க முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அதன்படி, கனிமவளத் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள பயன்படுத்தாத கல் குவாரிகள், தனியாா் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்து மழைக் காலங்களில் உருவாகும் மழை நீரைச் சேகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
வன விலங்குகள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் நுழைவதைத் தடுக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் வனப் பரப்பில் உள்ள தனியாா் கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீா் உயா்த்த நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகளை சீரமைத்தல், தொழில்சாலைக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



