கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கோவை ஆா்.எஸ்.புரத்தில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்


கோவை ஆா்.எஸ்.புரத்தில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையம் இரும்பாறையைச் சோ்ந்தவா் தங்கராஜ் (37), கட்டடத் தொழிலாளி. இவா் கோவை ஆா்.எஸ்.புரம்
பூ மாா்க்கெட் அருகே உள்ள கட்டடத்தில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவா் நிலைத்தடுமாறி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...