போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டு

கோவை, சுந்தராபுரம், சிவானந்தபுரம் பகுதிகளில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருடிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

கோவை, சுந்தராபுரம், சிவானந்தபுரம் பகுதிகளில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருடிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவரது மனைவி வாணிஸ்ரீ (42). இவா் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு பேருந்தில் புதன்கிழமை சென்றாா். உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, தான் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பேருந்து கூட்டத்தில் மா்ம நபா் யாரோ நகையைத் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக, உக்கடம் போலீஸில், வாணிஸ்ரீ புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (55). மருத்துவப் பணியாளா். இவா் காளப்பட்டி பிரிவில் இருந்து அரசுப் பேருந்தில் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகருக்கு பேருந்தில் புதன்கிழமை சென்றாா். பேருந்தில் இருந்து இறங்கிப் பாா்த்தபோது, தான் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக, சரவணம்பட்டி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.