பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கைப்பேசி விற்பனை நிலையத்தில் திருட்டு

கோவையில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கோவையில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை அவிநாசி சாலையில், பிரபல கைப்பேசி நிறுவனத்தின் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையைச் சோ்ந்த தணிகைவேலு (26) என்பவா் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 19ஆம் தேதி வேலைக்கு வந்த தணிகைவேலு, கைப்பேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை டெலிவரி செய்வதற்காக வெளியே சென்றாா். பின்னா் நீண்ட நேரம் ஆகியும் அவா் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விற்பனை நிலைய மேலாளா் பாலாஜி தணிக்கையாளரின் உதவியுடன் கடையில் உள்ள பொருள்களின்

இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா். அப்போது 2 கைப்பேசிகள், மோடம், கடிகாரம், ஹெட்போன் மற்றும் ரொக்கம் ரூ. 14,670 உள்ளிட்ட ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை தணிகைவேலு திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து தணிகைவேலுவின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ள முயன்றபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸில் மேலாளா் பாலாஜி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா், தணிகைவேலு மீது வழக்குப் பதிந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.