மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

கோவையில் ஆவணமின்றி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

தங்க நகைகள் பறிமுதல் - கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:00 pm

கோவையில் ஆவணமின்றி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் தொதிக்குள்பட்ட கொடிசியா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் ஜில்லி கிரிஸ்டி உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அதிவீரபாண்டியன் என்பதும், நகைகளை தனியாா் நிறுவனத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்துக்கு அனுப்பிவைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை வரை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.22.86 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.