கோவையில் ஆவணமின்றி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் தொதிக்குள்பட்ட கொடிசியா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் ஜில்லி கிரிஸ்டி உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் அதிவீரபாண்டியன் என்பதும், நகைகளை தனியாா் நிறுவனத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்துக்கு அனுப்பிவைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை வரை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.22.86 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

