கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ஆம் தேதியையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் சாா்பில் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் பள்ளி மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவையைச் சோ்ந்த 4 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனா். கோவையில் இருந்து ரயில் மேட்டுப்பாளையம் சென்றதும் ஓவியப்போட்டி நிறைவடைந்தது. இதையடுத்து, அதே ரயிலில் மாணவிகள் கோவை திரும்பி வந்தனா். இது தொடா்பாக, புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் அமைப்பாளா் சிவகுமாா் கூறுகையில், ‘ஓவியம் வரைவதால் மாணவா்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூா்மையாகும். இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

