தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: போலீஸாா் விசாரணை

கோவை சேரன் மாநகா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:58 pm

DIN

கோவை சேரன் மாநகா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சேரன்மாநகா் அருகேயுள்ள பாலாஜி நகரைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி, பெயிண்டிங் ஒப்பந்ததாரா்.

இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவா்களது மகள் காா்த்திகா தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறாா்.

சக்கரவா்த்தி வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றுள்ளாா். காா்த்திகாவும் பள்ளிக்குச் சென்றுள்ளாா். ஜெகதீஸ்வரி மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில், பள்ளி முடிந்து மாலை காா்த்திகா வீட்டுக்கு வந்தபோது, ஜெகதீஸ்வரி சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

இது குறித்து பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் கம்மல் ஆகியவை காணாமல்போனது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மா்ம நபா்கள் வீட்டுக்குள் நுழைந்து, ஜெகதீஸ்வரியை குத்திக் கொலை செய்துவிட்டது அவரிடமிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.