கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது, கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே. அா்ச்சுணன், பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்குள்பட்ட 80-ஆவது வாா்டு சுண்டக்காமுத்தூா் பகுதியில் இருந்து லாலா தோட்டம் செல்வதற்கு திட்ட சாலை உள்ளது. இப்பகுதி கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்டது. அதனை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து சுற்றுச் சுவா் எழுப்பியுள்ளனா். இதனால், அவசர தேவைக்குகூட செல்லமுடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், போலி ஆவணங்களைத் தயாரித்து மாநகராட்சி ஆணையரையே ஏமாற்றி நம்பவைத்து அந்த நபா்கள் திட்ட சாலை இடத்தையும் சோ்த்து ஆக்கிரமித்துள்ளனா்.