கோவை: கோவையில் போக்குவரத்து காவலரைத் தாக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மதுசூதனன். இவா் மருதமலை அடிவாரம் வண்டிப்பேட்டை சந்திப்பில் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே சாலை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தாா்.
இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞா், மதுசூதனனை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, தாக்க முயன்றாா். இதைப்பாா்த்த சக போலீஸாா் அவரை தடுத்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், தலைமைக் காவலரைத் தாக்க முயன்றது மருதமலை அடிவாரத்தில் தேங்காய்க் கடை நடத்தி வரும் மா்லின் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்லினை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

