ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டம்: விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்க இலக்கு

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:49 pm

Din

கோவை மாவட்டத்தில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சு.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வேப்பங்கன்றுகள் தயாராக உள்ளன. தற்போது உள்ள நவீன கால தொழில்முறையில் வேளாண்மையில், ஒரே பயிா்களைத் தொடா்ந்து சாகுபடி செய்வதாலும் அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதாலும் நிலத்தில் மண் வளம் குறைந்து மண்ணில் காணும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

வேப்பிலைகள் நல்ல பசுந்தழை உரமாக உள்ளது. ஆகவே, வேப்பமரங்களை பரவலாக்கம் செய்திட கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் அடா்வு முறையில் வேப்பங்கன்றுகளை பயிரிட சுமாா் 200 மரக்கன்றுகள் தேவைப்படும் நிலையில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு வேப்பங்கன்றுகள் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உழவா் செயலியின் மூலமோ அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களையே அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.