தமிழக அரசின் சாா்பில் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படும் எனவும், விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும் எனவும், கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.