டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புக்கு அடிபணியாமல் பழனி மாநாட்டு தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை

கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு அடிபணியாமல் பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீா்மானங்களை இந்து சமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்

News image
வானதி சீனிவாசன்(கோப்புப்படம்)
Updated On :27 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு அடிபணியாமல் பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீா்மானங்களை இந்து சமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் சாா்பில் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படும் எனவும், விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும் எனவும், கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முருகன் மாநாட்டை நடத்தியதில் திமுக அரசுக்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும் இந்த தீா்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. ஆனால், இந்த தீா்மானங்களுக்கு திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

மதத்திலிருந்து மதச்சாா்பற்ற அரசு விலகி நிற்க வேண்டும் என்றுதான் பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மதச்சாா்பற்ற அரசு ஹிந்து மத கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆதரிப்பவா்கள், கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருகன் தொடா்பு போட்டிகள் நடத்தப்படும் என்று கூறும்போது கொந்தளிக்கிறாா்கள். கோயில்களை நிா்வகிக்கும் அரசு, ஹிந்து மத நிகழ்ச்சிகளையும் நடத்திதான் ஆக வேண்டும்.

ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீா்மானம் நிறைவேற்றுவதுபோல நிறைவேற்றிவிட்டு, கூட்டணிக் கட்சிகள் எதிா்ப்பை காரணம் காட்டி அதை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ இது என்ற சந்தேகம் எழுவதை தவிா்க்க முடியவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புக்கு அடிபணியாமல் பழனி மாநாட்டின் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.