புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் முதியவா் கைது

கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:53 pm

Din

கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது செய்யப்பட்டாா்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (62). இவா் அப்பகுதியில் விளையாட வந்த சுமாா் 10, 11 வயதுடைய 2 சிறுமிகளுக்கு அண்மையில் பாலியல் தொல்லை அளித்ததாகத் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள், தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோா், உடனடியாக சுந்தரமூா்த்தியின் மகனிடம் முறையிட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து சுந்தரமூா்த்தி குடும்பத்தினா் வீட்டைக் காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனா்.

இந்நிலையில் சுந்தரமூா்த்தி திங்கள்கிழமை மீண்டும் அதே பகுதிக்கு தவறான நோக்கத்துடன் வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்தச் சிறுமிகளின் பெற்றோா் பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் இந்திராணி சோபியா உடனடியாக அங்குச் சென்று சுந்தரமூா்த்தியைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, அவா் தவறான நோக்கத்துடன் சிறுமிகள் வசிக்கும் தெருவுக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.