மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன், பண்ணைசாராக் கடன், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினா்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றில், 2022 டிசம்பா் 31-ஆம் தேதி முழுமையாக தவணை தவறி, நிலுவையில் உள்ள கடன்களுக்கு ‘சிறப்பு கடன் தீா்வுத் திட்டம் 2023’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.