புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திருப்பி செலுத்தாமல் நிலுவையில் உள்ள 500 வழக்குகளுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 20 வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற முகாமில் உடனடி தீா்வு காணப்பட்டன.
முகாமில், கனரா வங்கியின் மண்டல அலுவலா் எஸ்.கே.ஜெயராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு பணியாளா்கள் செந்தில்ராஜா, வினோபா, தேன்மொழி உள்ளிட்டோா் செய்தனா்.
தொடர்புடையது

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

தேசிய மக்கள் நீதிமன்றம்: மதுரை மாவட்டத்தில் 5,675 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


