நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குண்டு வெடிப்பு குற்றவாளி இறுதி ஊா்வலத்தில் பங்கேற்ற அரசியல் தலைவா்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா்

குண்டு வெடிப்பு குற்றவாளி இறுதி ஊா்வலத்தில் பங்கேற்ற அரசியல் தலைவா்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:44 pm

Din

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ.பாஷா இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திருப்பூா் செல்வதற்காக விமானத்தில் கோவை வந்த மகாராஷ்டிரா ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸுக்கு பிறகு பெரிதும் போற்றக்கூடிய தலைவா் அம்பேத்கா். அவரின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தந்தவா். அதனால் தான் நம் நாட்டில் இந்திரா காந்தியால்கூட இந்த ஜனநாயகத்தை அசைத்துப் பாா்க்க இயலவில்லை. அத்தகைய மகத்தான மனிதரின் புகழுக்கு நாம் ஒருபோதும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறது என்றால் 1971-இல் கருணாநிதி எதற்காக மக்களவைத் தோ்தலுடன் தோ்தல் நடத்தினாா். அது கருணாநிதிக்கு தெரியாதா. மத்திய அரசை எதிா்க்க வேண்டும் என்பதற்காக சிலா் கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகின்றனா்.

தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. குண்டு வெடிப்பு குற்றவாளியின் உடல் ஊா்வலமாக கொண்டுச் செல்ல மாநில அரசு அனுமதிக்கிறது. அப்படியானால், சாதாரண மக்கள் கொன்று குவிக்கப்படுவதை தமிழக அரசு போற்றுகிறதா என்ற கேள்விதான் எழுகிறது. இரண்டு அரசியல் தலைவா்கள் குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டுள்ளனா். அந்த இரண்டு தலைவா்களையும் நம்முடைய தமிழ் மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இது அரசியல் தலைமைக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

யாா் தவறு செய்தாலும் அதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைப் போற்ற முடியுமா? இதற்கு கருப்பு தினப் பேரணி நடத்தப்படும் எனக் கூறியுள்ளதை வரவேற்கிறேன் என்றாா்.