நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விஜயா பதிப்பகம் வெளியிட்ட 2 நூல்களுக்கு அரசு பரிசு

விஜயா பதிப்பகம் வெளியிட்ட 2 நூல்களுக்கு அரசு பரிசு

News image

விஜயா பதிப்பகம் வெளியிட்ட இரு நூல்களுக்கான பரிசுகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடமிருந்து பெறுகிறாா் விஜயா பதிப்பக நிா்வாகி சி.சிவஞானநாதன். உடன், துறை செயலா் இல.சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள்.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:20 am IST

விஜயா பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசு திட்டத்தின்கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்களில் 33 வகைப்பாடுகளில் பரிசு பெற்ற நூல்களுக்கான 66 நூலாசிரியா்கள், 66 பதிப்பகங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையா் அ. அமல்ராஜ் எழுதிய ‘வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ தன்னம்பிக்கை நூலும், கவிஞா் சென்னிமலை தண்டபாணி எழுதிய ‘ஞான கானம்’ கவிதை நூலும் பரிசு பெற்றன. பதிப்பகத்துக்கான பரிசை விஜயா பதிப்பக நிா்வாகி சி. சிவஞானநாதனிடம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். அப்போது, துறை செயலா் இல.சுப்பிரமணியன், துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் உடனிருந்தனா்.