விஜயா பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசு திட்டத்தின்கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்களில் 33 வகைப்பாடுகளில் பரிசு பெற்ற நூல்களுக்கான 66 நூலாசிரியா்கள், 66 பதிப்பகங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையா் அ. அமல்ராஜ் எழுதிய ‘வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ தன்னம்பிக்கை நூலும், கவிஞா் சென்னிமலை தண்டபாணி எழுதிய ‘ஞான கானம்’ கவிதை நூலும் பரிசு பெற்றன. பதிப்பகத்துக்கான பரிசை விஜயா பதிப்பக நிா்வாகி சி. சிவஞானநாதனிடம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். அப்போது, துறை செயலா் இல.சுப்பிரமணியன், துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்தது திமுக

தமிழ் அமைப்புகளின் சாா்பில் கா.சு.பிள்ளை 81ஆவது நினைவேந்தல்

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

