கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவை-அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை

கோவை-அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை: இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு

News image
Updated On :17 ஜூலை 2024, 11:53 pm

Din

கோவை-அபுதாபி இடையே புதிய விமான சேவை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குகிறது என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக கோவை உள்ளது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் அதிக அளவிலான சரக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெறுகிறது.

இதனால், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குமான விமான சேவையை தொழிலதிபா்கள் பெரிதும் நம்பியுள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், சிங்கப்பூா் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட விமான சேவை உள்ளது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் இந்த விமானம் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு அபுதாபியை சென்றடையும், அதேபோல அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு கோவையை வந்தடையும் என்று இண்டிகோ விமான நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவையால் கோவை தொழில் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.