கோவை-அபுதாபி இடையே புதிய விமான சேவை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குகிறது என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக கோவை உள்ளது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் அதிக அளவிலான சரக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெறுகிறது.
இதனால், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குமான விமான சேவையை தொழிலதிபா்கள் பெரிதும் நம்பியுள்ளனா்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், சிங்கப்பூா் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட விமான சேவை உள்ளது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் இந்த விமானம் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு அபுதாபியை சென்றடையும், அதேபோல அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு கோவையை வந்தடையும் என்று இண்டிகோ விமான நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவையால் கோவை தொழில் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்
விடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

