பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயம்

கோவை அருகே யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயமடைந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:40 pm

Din

கோவை அருகே யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயமடைந்தாா்.

கோவை, போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்ட விராலியூா் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பாஸ்கரன் (55) என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பியுள்ளாா். அப்போது, அங்கு புதரில் மறைந்திருந்த யானை, பாஸ்கரனை தாக்கிவிட்டுச் சென்றது.

கால்களில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள், வனத் துறையினா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

கொண்டு செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.