ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

450 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

450 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

Updated On :6 மார்ச் 2024, 6:36 pm

காந்திபுரத்தில் 450 போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவா் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, அதில் 450 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் கோவை, சலீவன் வீதியைச் சோ்ந்த அருள்செல்வன் (25) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அருள்செல்வத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 450 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.