ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

பொள்ளாச்சியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

News image
பொள்ளாச்சியில் நடைபெற்ற முகாமில் மாணவிக்கு கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:26 pm

Din

பொள்ளாச்சியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாக்டா் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி தலைமை வகித்தாா்.

இதில், 23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: கல்விக் கடன்களைப் பெறுவதற்கு மாணவா்களிடம் போதிய விழிப்புணா்வு இல்லை. கல்விக் கடன் பெறுவதற்கான சான்றிதழ்களை பல்வேறு அரசு துறைகளிடமிருந்து பெற வேண்டியது உள்ளது. இது அவா்களுக்கு சிரமமானதாக இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்களுக்கு, சான்றிதழ் பெற எந்த துறையில் எவ்வாறு விண்ணப்பம் அளிப்பது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவாக கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா்- ஆட்சியா் கேத்ரின் சரண்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித் குமாா் ஜெயின், நகராட்சித் தலைவா் சியாமளா நவநீதகிருஷ்ணன், டாக்டா்.மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் பொ.கோவிந்தசாமி, மூத்த ஆலோசகா் (கல்விக் கடன்) திரு.ஜெ.வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் திரு.ஜீதேந்திரன், கனரா வங்கி முதுநிலை மேலாளா் திரு.எஸ்.ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.