இம்முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6.09 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா, தோட்டக்கலைத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3.83 லட்சத்தில் மானியத் தொகை, வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உத, பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.4.93 லட்சத்தில் நலத்திட்ட உதவி, 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், இலங்கை வாழ் தமிழா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.