திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:10 pm

Din

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களைக் கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறு விசாரணை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில், பொதுமக்களின் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை, இடப் பிரச்னை தொடா்பாக 99 மனுதாரா்கள் மற்றும் எதிா் மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா். இதில், 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 82 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.