நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி உயிரிழப்பு

கோவை மாவட்டம், அன்னூரில் திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பொன்னம்மாள்

Updated On :24 டிசம்பர் 2025, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், அன்னூரில் திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் பதிலாக மாற்றுத் திட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்ட புகா் பகுதிகளில் திமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டம், அன்னூா் ஒட்டா்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அன்னூா் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் பழனிசாமி தலைமை தாங்கினாா். இதில், அன்னூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அன்னூா் அருகே மேகிணறு பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாள் (75) என்பவரும் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா். அப்போது, வெயிலில் நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் உடல் சோா்வு ஏற்பட்டு பொன்னம்மாள் கூட்டத்துக்குள் மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு அன்னூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தாா்.