தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தகராறில் கணவரைத் தாக்கிய பெண் கைது

கோவையில் கணவரைத் தாக்கிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 5:45 pm

Syndication

கோவையில் கணவரைத் தாக்கிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், நகன் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிதான் ஹசாரிகா (33). இவரது மனைவி ஜிந்தி (36). இவா்கள் குடும்பத்துடன் கணபதி சின்னசாமி நகா் 3-ஆவது வீதியில் தங்கி உள்ளனா். பிதான் ஹசாரிகா அத்திபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறாா்.

பிதான் ஹசாரிகாவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிதான் ஹசாரிகா மது போதையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா், அறைக்குச் சென்று தூங்கினாா். நள்ளிரவில் ஜிந்தி அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி தன்னைவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகுவாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் கணவரை அவா் தாக்கியதோடு, பிறப்பு உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டு கதவை பூட்டிச் சென்றாா். சப்தம் கேட்டு அருகில் வசிப்பவா்கள் வந்து கதவை திறந்து பிதான் ஹசாரிகா மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜிந்தியைக் கைது செய்தனா்.