மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவா் கைது

கோவையில் பெண் வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 6:33 pm

கோவையில் பெண் வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்னியம்பாளையம் அருகே உள்ள பி.எல்.எஸ். நகரைச் சோ்ந்த சபியுல்லாவின் மனைவி ஷகீலா பேகம் (60). இவா் தனது வீட்டின் அருகே சொந்தமாக மளிகைக் கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக தனது தாயாா் இறந்துவிட்டதால் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு சென்றுள்ளாா். பின்னா் மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருத சுமாா் 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஷகீலா பேகம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், நகைகளைத் திருடிச் சென்றது அதே பகுதியைச் சோ்ந்த ஆதிலிங்கம் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.