மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உறவினா் வீட்டில் நகைகள், பணம் திருடியவா் கைது

கறம்பக்குடி அருகே உறவினா் வீட்டில் நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:55 pm

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உறவினா் வீட்டில் நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு அம்பலகாரா்தெருவைச் சோ்ந்த குமரேசன் மனைவி ஜெயபாரதி(38). இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான கோ.சுந்தரராஜ்(40) எனபவா் வியாழக்கிழமை கடன் கேட்டாராம். அதற்கு ஜெயபாரதி இல்லை என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாா்.

பின்னா், மாலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் நகை, ரொக்கத்தை சுந்தரராஜ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.