கைது
கைது

பள்ளியில் கைப்பேசி திருடியவா் கைது

வந்தவாசி அருகே பள்ளியில் கைப்பேசி மற்றும் பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசி அருகே பள்ளியில் கைப்பேசி மற்றும் பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்க்குமரன் (38). இவா், கீழ்க்கொடுங்காலூரில் மெட்ரிக்குலேஷன் பள்ளி நடத்தி வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறையை தாழிட்டுவிட்டு சாப்பிடச் சென்றுள்ளாா்.

பின்னா் வந்து பாா்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்க்குமரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், பள்ளியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், சென்னை பெரம்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (21) என்பவா் கைப்பேசி மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிரகாஷை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com