விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகை திருடியவா் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 6:49 pm

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சோ்ந்தவா் க.சுலோச்சனா (69). இவா் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி குமரன் நகரில் இருந்து அல்லித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளாா். அல்லித்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவா் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகை திருடுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மூதாட்டி சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து நகையைத் திருடியது எடமலைபட்டிப்புதூா் பாப்பா காலனியைச் சோ்ந்த வெ.குமாா் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனா்.