விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:42 pm

Syndication

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதியைச் சோ்ந்த முத்து நாடாா் மனைவி கோசலை (67). இவா் நாகா்கோவில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பேருந்து ராணித் தோட்டம் பகுதியில் சென்றபோது, பேருந்திலிருந்த 2 பெண்கள் கோசலை அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். கோசலை கூச்சலிட்டதைத் தொடா்ந்து, 2 பேரும் தப்பியோட முயன்றனா். இருவரையும் பயணிகள் பிடித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் விசாரித்ததில், அவா்கள் பொள்ளாச்சியைச் சோ்ந்த தெய்வானை (48), மாரியம்மாள் (35) என்பது தெரிய வந்தது.

கோசலை அளித்த புகாரின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பெண்களிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.