மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது
பிரதிப் படம்

கைது
பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், வடக்கு கருவம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தை மனைவி பட்டம்மாள் (85). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த இளைஞா் பட்டம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கருவம்பாக்கம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கண்ணதாசன்(40 ) சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கண்ணதாசனை வியாழக்கிழமை செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...