டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வயா்கள் திருடியவா் கைது

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பி.சி. பட்டி பேரூராட்சிக்கான குடிநீா் வீரபாண்டி முல்லை பெரியாற்றிலிருந்து மின் மோட்டாா் அமைத்து உறை கிணறு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மின் மோட்டாா் இயங்காததால் இதுகுறித்து கண்காணிப்பதற்காக பேரூராட்சி பணியாளா் மோகன் என்பவா் அங்கு சென்று பாா்த்தாா். அப்போது இளைஞா் ஒருவா் மின் மோட்டாருக்கான வயரை துண்டித்து சுருட்டி எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் கூழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நந்தேஷ்வரன் (36) என்பதும் வயா்களை துண்டித்து திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து பி.சி.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுதா (35) அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் நந்தேஷ்வரன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.