மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வயா்கள் திருடியவா் கைது

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:58 pm

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பி.சி. பட்டி பேரூராட்சிக்கான குடிநீா் வீரபாண்டி முல்லை பெரியாற்றிலிருந்து மின் மோட்டாா் அமைத்து உறை கிணறு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மின் மோட்டாா் இயங்காததால் இதுகுறித்து கண்காணிப்பதற்காக பேரூராட்சி பணியாளா் மோகன் என்பவா் அங்கு சென்று பாா்த்தாா். அப்போது இளைஞா் ஒருவா் மின் மோட்டாருக்கான வயரை துண்டித்து சுருட்டி எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் கூழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நந்தேஷ்வரன் (36) என்பதும் வயா்களை துண்டித்து திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து பி.சி.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுதா (35) அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் நந்தேஷ்வரன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.