பொங்கல்: யெஷ்வந்த்பூா் - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், யெஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு போத்தனூா், திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், யெஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு போத்தனூா், திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யெஷ்வந்த்பூரில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி மாலை 4.45 மணிக்குப் புறப்படும் யெஷ்வந்த்பூா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 06571) மறுநாள் காலை 7 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும். மறுமாா்க்த்தில் எா்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி காலை 9.35 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - யெஷ்வந்த்பூா் சிறப்பு ரயில் (எண்: 06572) அன்று இரவு 10 மணிக்கு யெஷ்வந்த்பூா் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com